உணவு நெருக்கடிகள் மீதான உலகளாவிய அமைப்பானது (Global Network Against Food Crises – GNAFC) சமீபத்தில் 2021 ஆம் ஆண்டிற்கான உணவு நெருக்கடிகள் மீதான உலகளாவிய அறிக்கையினை வெளியிட்டது.
GNATC என்பது ஐரோப்பிய ஒன்றியம், ஐக்கிய நாடுகள் அமைப்பு மற்றும் இதர அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்கள் ஆகியவற்றால் அமைக்கப்பட்ட ஒரு சர்வதேசக் கூட்டணியாகும்.
2020 ஆம் ஆண்டில் 40 மில்லியன் மக்கள் பசியில் ஆழ்த்தப்பட்டதற்கான முக்கியக் காரணம் பொருளாதார நெருக்கடி தான் என்று இந்த அறிக்கை கூறுகிறது.
2019 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 24 மில்லியன் உயர்ந்துள்ளது.
குறிப்பு
உணவுப் பற்றாக்குறையினால் மோசமாக பாதிக்கப்பட்டது ஆப்பிரிக்கக் கண்டம் ஆகும்.
உலகளாவிய உணவுப் பற்றாக்குறைகளில் 63%க்கும் மேற்பட்டவை ஆப்பிரிக்காவில் பதிவாகியுள்ளது.
பருவநிலைப் பிரச்சினைகளால் ஜிம்பாப்வே மற்றும் ஹைத்தி ஆகிய நாடுகளில் 15 மில்லியன் மக்களின் உணவுப் பாதுகாப்பானது பாதிக்கப்பட்டுள்ளது.