உணவு மற்றும் வேளாண்மை நிலை (SOFA) குறித்த அறிக்கை 2025 ஆனது ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பினால் (FAO) வெளியிடப் பட்டது.
நிலத் தரமிழப்பு ஆனது, உலகளவில் 1.7 பில்லியன் மக்களைப் பாதிப்பதோடு, உணவுப் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் அமைப்புகளை அச்சுறுத்துகிறது என்று இந்த அறிக்கை கூறியது.
உலகளாவியக் காடழிப்புக்கு, சுமார் 90% காடுகளின் இழப்புக்குப் பங்களித்த வேளாண்மையின் விரிவாக்கம் முக்கிய காரணமாக உள்ளது.
நிலத் தரமிழப்பு காரணமாக ஒவ்வோர் ஆண்டும் 3.6 மில்லியன் ஹெக்டேர் (mha) பயிர் நிலங்கள் கைவிடப் படுவதாக அறிக்கை குறிப்பிட்டது.
கிழக்கு மற்றும் தெற்காசியாவில், கடுமையான நிலத் தரமிழப்பு மற்றும் அடர்த்தியான மக்கள்தொகை நெருக்கடியை எதிர்கொள்ளும் மிகப்பெரிய மக்கள் தொகை உள்ளது.
மனிதனால் தூண்டப்பட்ட நிலத் தரமிழப்புடன் தொடர்புடைய மிக உயர்ந்தப் பயிர் மகசூல் இடைவெளிகளில் சில இந்தியாவில் பதிவாகியுள்ளது.