சட்டவிரோதமான முறையில் பயணச்சீட்டு வழங்குதல் தொடர்பான ஒரு மாத கால அளவிலான நடவடிக்கையின் (இந்தியா முழுவதுமான) ஒரு பகுதியாக, 1,459 தரகர்களைக் கைது செய்து, 366 IRCTC முகவர் அடையாளக் குறியீடுகள் மற்றும் 6751 தனி நபர் அடையாளக் குறியீடுகளை ரயில்வே பாதுகாப்புப் படை முடக்கியதாக 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் 02 அன்று இரயில்வே நிர்வாகம் அறிவித்தது.
திருவிழா மற்றும் கோடைக்கால நெரிசல் காரணமாக, முன்பதிவு செய்யப்படும் பயணச் சீட்டுகளுக்கான தேவை கடுமையாக அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்புடன், நீண்ட தூர இரயில் சேவைகள் தொடங்கப்பட்டதைத் தொடர்ந்து, இந்த நடவடிக்கை என்பது தொடங்கப்பட்டது.