உயர் நீதிமன்ற நீதிபதி – செந்தில் குமார் இராமமூர்த்தி
February 21 , 2019 2580 days 1009 0
2019 ஆம் ஆண்டு பிப்ரவரி 18 அன்று குடியரசுத் தலைவர் மதராஸ் உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக செந்தில் குமார் இராமமூர்த்தியை நியமித்து அறிவிக்கையை வெளியிட்டுள்ளார். இவர் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு கூடுதல் நீதிபதியாகப் பணியாற்றுவார்.
2016 ஆம் ஆண்டு டிசம்பர் 19 அன்று வழக்குரைஞர் செந்தில் குமார் இராமமூர்த்தியை உயர்நீதிமன்றத்தின் நீதிபதியாக நியமிப்பதற்கான பரிந்துரையானது இந்திய உச்ச நீதிமன்ற கொலிஜியத்தினால் அனுப்பப்பட்டது.
இந்தப் பரிந்துரைக்கு 2017 ஆம் ஆண்டு டிசம்பர் 04 அன்று கொலிஜியம் தனது ஒப்புதலை வழங்கியது. ஆனால் மத்திய அரசினால் இவரது பெயர் திருப்பி அனுப்பப்பட்டது.