உலகப் பொருளாதார மற்றும் காப்பீட்டுக் கண்ணோட்ட அறிக்கை
September 10 , 2022 1395 days 649 0
சுவிஸ் ரீ என்ற நிறுவனமானது இந்த அறிக்கையினை வெளியிட்டது.
2021 ஆம் ஆண்டில் 10வது பெரிய காப்பீட்டுச் சந்தையாக உள்ள இந்தியா 2032 ஆம் ஆண்டில் 6வது பெரிய காப்பீட்டுச் சந்தையாகத் திகழும் என்று இந்த அறிக்கை கூறுகிறது.
இந்தியாவில் ஆயுள் காப்பீட்டு தவணைகள் 2022 ஆம் ஆண்டில் முதன்முறையாக 100 பில்லியன் அமெரிக்க டாலர்களைக் கடக்க உள்ளது.
பணவீக்கம் மற்றும் பணவியல் கொள்கை நெருக்கீடுகள் ஆகியவை நீண்ட கால சவரன் தங்கப் பத்திர இலாப வழங்கீடுகளை அதிகப்படுத்துகின்றன.
இது அதிக உண்மையான வழங்கீடுகள் மற்றும் பணவீக்கக் கணிப்புகள் ஆகிய இரண்டிலும் சந்தை விலை நிர்ணயம் செய்ய உதவுகிறது.
காப்பீட்டாளர்கள் காலப்போக்கில் அதிக உரிமைக் கோரல் செலவை ஈடு செய்ய உதவும் வகையில் அதிக முதலீட்டு வருவாயிலிருந்துப் பயனடைவார்கள்.