TNPSC Thervupettagam

உலகம் உங்கள் கையில் திட்டம்

January 8 , 2026 2 days 82 0
  • சிவகங்கை மாவட்டத்தில் ‘உலகம் உங்கள் கையில்’ திட்டத்தின் கீழ் தமிழக அரசு 2026 ஆம் ஆண்டு ஜனவரி 05 ஆம் தேதியன்று இலவச மடிக்கணினி வழங்கல் திட்டத்தினைத் தொடங்கியது.
  • இந்தத் திட்டம் தமிழ்நாடு முழுவதும் 20 லட்சம் மாணாக்கர்களுக்குப் படிப்படியாக மடிக்கணினி வழங்குவதை இலக்காகக் கொண்டுள்ளது.
  • இதன் முதல் கட்டத்தில், 10 லட்சம் மாணாக்கர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கப் படுகின்றன.
  • இது அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளைச் சேர்ந்த மாணாக்கர்களையும், 7.5% இட ஒதுக்கீடு மற்றும் நலத்திட்டங்களின் கீழ் தகுதியான தனியார் கல்லூரி மாணாக்கர்களையும் உள்ளடக்கியது.
  • மருத்துவம், பொறியியல், கலை மற்றும் அறிவியல், வேளாண்மை, சட்டம், பல்நுட்பக் கல்லூரி, செவிலியம் மற்றும் தொழில்துறைப் பயிற்சி நிறுவனங்கள் (ITI) மாணாக்கர்கள் இதில் அடங்குவர்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்