TNPSC Thervupettagam

உலகளாவியப் பட்டினிக் குறியீடு 2025

October 20 , 2025 16 hrs 0 min 14 0
  • 136 நாடுகளை மதிப்பீடு செய்த 2025 ஆம் ஆண்டு உலகளாவியப் பட்டினிக் குறியீட்டு (GHI) அறிக்கையானது வெளியிடப்பட்டுள்ளது.
  • தற்போதைய வேகத்தில் குறைந்தது 56 நாடுகள் ஆனது 2030 ஆம் ஆண்டிற்குள் குறைந்தபட்ச பட்டினி வரம்பை இழக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
  • 2016 ஆம் ஆண்டில் 19.0 ஆக இருந்த உலகளாவிய GHI மதிப்பெண் 2025 ஆம் ஆண்டில் 18.3 ஆக உள்ளதுடன் 'மிதமான' என்ற பிரிவில் வைக்கப்பட்டுள்ளது.
  • புருண்டி, காங்கோ ஜனநாயக குடியரசு, ஹைத்தி, மடகாஸ்கர், சோமாலியா, தெற்கு சூடான் மற்றும் ஏமன் ஆகிய ஏழு நாடுகளில் பட்டினி நிலையானது 'ஆபத்தான' மட்டத்தில் உள்ளது.
  • 27 நாடுகளில் 2016 ஆம் ஆண்டிலிருந்து பட்டினி நிலை அதிகரித்து வருவதுடன், 35 நாடுகளில் பட்டினி நிலை 'தீவிரமானது' என வகைப்படுத்தப் பட்டுள்ளது.
  • பிஜி, ஜோர்டான், லிபியா, சாலமன் தீவுகள் மற்றும் சிரியா ஆகிய ஐந்து நாடுகள் 2000 ஆம் ஆண்டை விட 2025 ஆம் ஆண்டில் மோசமான GHI மதிப்பெண்களைப் பெற்று ள்ளன.
  • ஆப்பிரிக்காவில் உள்ள காங்கோ ஜனநாயகக் குடியரசு, லைபீரியா, மடகாஸ்கர், கென்யா, சோமாலியா மற்றும் சாம்பியா ஆகிய ஆறு நாடுகள் மிகவும் ஆபத்தான பட்டினி நிலையைக் கொண்டுள்ளன.
  • தஜிகிஸ்தான், மொசாம்பிக், ருவாண்டா, சோமாலியா, டோகோ மற்றும் உகாண்டா போன்ற நாடுகளில் பட்டினி நிலையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
  • இந்தியா, வங்காள தேசம், எத்தியோப்பியா, நேபாளம் மற்றும் சியரா லியோனி ஆகிய நாடுகளில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள், இலக்கு வைக்கப்பட்ட கொள்கைகள் பட்டினி நிலையைக் குறைக்கும் என்பதைக் காட்டுகின்றன.
  • GHI ஆனது ஊட்டச்சத்து குறைபாடு, குழந்தை வளர்ச்சி குறைபாடு, குழந்தை எடை இழப்பு (வயதிற்கேற்ற எடையில்லாமல் இருத்தல்) மற்றும் குழந்தை இறப்பு ஆகிய நான்கு குறிகாட்டிகளை அடிப்படையாகக் கொண்டதாகும்.
  • இது கன்சர்ன் வேர்ல்டுவைட் (அயர்லாந்து), வெல்துங்கர்ஹில்ஃப் (ஜெர்மனி) மற்றும் சர்வதேச அமைதி மற்றும் ஆயுத மோதல் சட்டம் (IFHV) ஆகியவற்றால் வெளியிடப் படுகிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்