உலகளாவியப் போக்குகள் குறித்த அறிக்கை: 2024 ஆம் ஆண்டில் கட்டாய புலம் பெயர்வு
June 17 , 2025 58 days 81 0
இது ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான உயர் ஆணையரகத்தினால் (UNHCR) வெளியிடப்பட்டது.
கட்டாய புலம்பெயர்வு என்பது துன்புறுத்தல், வன்முறை, மனித உரிமை மீறல்கள், பேரழிவுகள் போன்ற காரணிகளால் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறும் நபர்களின் சூழ்நிலைகளைக் குறிக்கிறது.
2024 ஆம் ஆண்டின் இறுதியில் உலகளவில் 123.2 மில்லியன் மக்கள் வலுக் கட்டாயமாக புலம்பெயர்ந்தனர்.
வலுக் கட்டாயமாக புலம்பெயர்ந்த மக்களில் மூன்றில் ஒரு பங்கிற்கும் அதிகமானோர் சூடான், சிரியா, ஆப்கானிஸ்தான் அல்லது உக்ரேனிய நாட்டினைச் சேர்ந்தவர்கள் ஆவர்.