உலகப் பொருளாதார மன்றம் (WEF) 2026 ஆம் ஆண்டு உலகளாவிய அபாய அறிக்கையை வெளியிட்டது.
இது இணையவெளிப் பாதுகாப்பை இந்தியாவின் மிகப்பெரிய ஆபத்து கொண்டதாகவும், புவிசார் பொருளாதார மோதலை மிகவும் கடுமையான உலகளாவிய அச்சுறுத்தலாகவும் அடையாளம் கண்டுள்ளது.
டிஜிட்டல் நிர்வாகம், நிதி தொழில்நுட்பம் மற்றும் முக்கியமான டிஜிட்டல் உள் கட்டமைப்பைச் சார்ந்திருப்பதால் இணையவெளிப் பாதுகாப்பு இந்தியாவின் மிகப் பெரிய ஆபத்தாக உள்ளது.
புவிசார் பொருளாதார மோதல் என்பது புவிசார் அரசியல் நலன்களுக்காக வர்த்தக கட்டுப்பாடுகள், தடைகள், முதலீட்டு கட்டுப்பாடுகள் மற்றும் தொழில்நுட்பத் தடைகளைப் பயன்படுத்தும் நாடுகளைக் குறிக்கிறது.
இந்தியாவிற்கான பிற முக்கிய ஆபத்துகளில் வருமானம் மற்றும் செல்வ சமத்துவமின்மை, பலவீனமான பொதுச் சேவைகள், பொருளாதார மந்தநிலைகள் மற்றும் அரசு சார்ந்த ஆயுத மோதல்கள் ஆகியவை அடங்கும்.
2026 ஆம் ஆண்டில் உலகளாவிய அபாயங்களில் ஆயுத மோதல்கள், தீவிர வானிலை, காலநிலை மாற்றம், தொழில்நுட்ப அச்சுறுத்தல்கள் மற்றும் இணையவெளிப் பாதுகாப்பின்மை ஆகியவை அடங்கும்.