அக்ஸஸ் இன்போ ஐரோப்பா நிறுவனம் மற்றும் சட்டம் மற்றும் மக்களாட்சி மையம் ஆகியவை இணைந்து வெளியிட்ட உலகளாவிய ஆர்டிஐ (தகவல் அறியும் உரிமைச் சட்டம்) மதிப்பீட்டின்படி, மொத்தமுள்ள 123 நாடுகளில் இந்தியா 6 வது இடத்தில் உள்ளது.
இந்தியா, 2011 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட தரவரிசையில் 2 வது இடத்தில் இருந்தது. இந்தியா, 2013 ஆம் ஆண்டு வரை வெளியிடப்பட்ட தரவரிசை வரையில் 2 வது இடத்திலேயே தொடர்ந்தது.
“தடைகள் மற்றும் பாதுகாப்பு” பிரிவில் இந்தியா மோசமாக செயல்பட்டது என்று இந்த அறிக்கை கூறுகிறது. குற்றம் சார்ந்த தவறுகளை வெளிப்படுத்துபவர்களை பாதுகாக்க இந்தியா தவறிவிட்டதை இது வெளிப்படுத்துகிறது.
இந்தக் களஆய்வு டிரான்ஸ்பெரன்சி இண்டர்நேசனல் இந்தியா (Transparency International India) என்ற அமைப்பால் மேற்கொள்ளப்பட்டது.
இதில் ஆப்கானிஸ்தான் முதலிடத்தில் உள்ளது. இதற்கு அடுத்து மெக்சிகோ, செர்பியா, இலங்கை மற்றும் ஸ்லோவேனியா ஆகிய நாடுகள் உள்ளன.
இதில் ஆஸ்திரியா 33 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் உள்ளது.