பாகுவில் நடைபெறும் COP29 மாநாடு ஆனது, 2035 ஆம் ஆண்டிற்குள் வளர்ந்து வரும் நாடுகளுக்கு ஆண்டுதோறும் சுமார் 1.3 டிரில்லியன் டாலர் பருவநிலை நிதியைத் திரட்டுவதை நோக்கமாகக் கொண்ட பாகு-பெலெம் என்ற செயல் திட்டத்தினை நிர்ணயித்தது.
பருவநிலை நடவடிக்கைகளுக்கான நிதியை விரிவுபடுத்துவதற்காக, மீள் நிரப்புதல், மறு சமநிலைப்படுத்துதல், மறுசீரமைத்தல், புதுப்பித்தல் மற்றும் மறுவடிவமைப்பு செய்தல் ஆகிய ஐந்து முன்னுரிமைகளை இந்தச் செயல் திட்டம் குறிப்பிட்டுக் காட்டியது.
பிரேசிலின் பெலெமில் நடைபெறும் COP30 மாநாட்டில், இந்த இலக்குகளை உலக நாடுகள் பருவநிலை நீதி மற்றும் சமமான நிதிக்கான மேம்படுத்தக் கூடிய நடவடிக்கைகளாக மாற்றும் என்று எதிர்பார்க்கப் பட்டது.
இந்த உச்சி மாநாடு பலதரப்பு மேம்பாட்டு வங்கிகளை (MDBs) சீர்திருத்துதல், கடன் வழங்கீட்டினை மேம்படுத்துதல் மற்றும் கார்பன் சந்தை ஒருமைப்பாட்டை வலுப் படுத்துதல் ஆகியவற்றில் கவனம் செலுத்தியது.