ஆப்பிரிக்க மற்றும் ஆசிய நாடுகளில் ஒன்றிணைந்துச் செயல்படுத்துவதற்கான ஒரு உலகளாவிய மேம்பாட்டுக் கூட்டாண்மை ஒப்பந்தத்தினை இந்தியா மற்றும் அமெரிக்கா இரண்டும் இணைந்து மேலும் 5 ஆண்டுகளுக்குப் புதுப்பித்துள்ளது.
வட்டார இணைப்பு, தூய்மையான ஆற்றல் மற்றும் பேரிடர் அபாயக் குறைப்பு உள்ளிட்ட முக்கியப் பிரச்சினைகளில் இவை ஒன்றிணைந்து செயல்படும்.
உலகளாவிய மேம்பாட்டிற்கான முத்தரப்பு ஒத்துழைப்பு குறித்த வழிகாட்டுதல் கொள்கைகளின் அறிக்கையினுடைய 2வது திருத்தத்தில் இரு நாடுகளும் கையெழுத்திட்டுள்ளன.
2014 ஆம் ஆண்டில் கையெழுத்தான வழிகாட்டுதல் கொள்கைகளின் அறிக்கை ஒப்பந்தமானது மூன்றாம் தரப்பு நாடுகளில் குறிப்பாக ஆசிய மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் மேம்பாட்டு ஒத்துழைப்பிற்கான கட்டமைப்பினை வழங்குகின்றது.
இந்த ஒப்பந்தத்தில் மேற்கொள்ளப்பட்ட 2வது திருத்தமானது இதன் காலவரம்பை 2026 ஆம் ஆண்டுசெப்டம்பர் மாதம் வரை நீட்டித்துள்ளது.