உலகின் காற்றுத் தொட்டி மூலமான முதல் நடமாடும் நீர் வசதி
March 31 , 2021 1529 days 745 0
மைத்ரி அக்வாடெக் நிறுவனம் ”காற்றுத் தொட்டி மற்றும் நீர் தகவல் மையத்திலிருந்து”தனது “மேக்தூத் தீர்வு” (MEGHDOOT solution) என்பதைப் பயன்படுத்தி ஆந்திரப் பிரதேசத்தின் விசாகப்பட்டினத்தில் உலகின் முதல் நடமாடும் (மொபைல்) நீர் வசதியினை வழங்க உள்ளது.
மைத்ரி அக்வாடெக் என்பது “இந்தியாவிலேயே உருவாக்குவோம்” (Make in India) என்ற திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட ஒரு புத்தாக்க நிறுவனமாகும்.
மேக்தூத் (MEGHDOOT) என்றால் ‘வானின் தூதுவர்’ (Messenger of the Sky) என்று பொருளாகும்.
இந்த முன்னெடுப்பிற்கு GVMC (Greater Visakhapatnam Municipal Corporation - விசாகப் பட்டின பெரு மாநகராட்சி) மற்றும் SEWAH திட்டம் (Sustainable Enterprises for Water and Health) ஆதரவளித்துள்ளது.
மேக்தூத் சொலூசன்
ஜல்சக்தி அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஒரே வளிமண்டல நீர் உருவாக்கும் அமைப்பு இதுவாகும்.
இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கியாஸ்க் ஆனது காற்றிலுள்ள ஈரப்பதத்தை உறிஞ்சி தூய்மையான கனிமச் செறிவூட்டப்பட்ட குடிநீரை வழங்கும்.
அந்தக் காற்று ஏற்கனவே இருக்கும் நிலத்தடி மற்றும் மேற்பரப்பு நீர் வளங்களைச் சார்ந்திராத வகையில் இருக்கும்.
இது நீண்ட காலத்திற்கு சுற்றுச்சூழலுக்கு ஏதுவான 100% நுண்ணுயிரியற்ற குடிநீரை வழங்கும் திறனுடையது.
இது தினமும் 1 மில்லியன் லிட்டருக்கும் மேல் குடிநீரை உற்பத்தி செய்யும் திறனைக் கொண்டது.
இதன்மூலம் உற்பத்தி செய்யப்படும் குடிநீர் உலக சுகாதார அமைப்பு (WHO) மற்றும் இந்தியக் குடிநீர் தரநிலைகளைப் பூர்த்தி செய்யும் வகையிலானதாகும்.
குறிப்பு
நல்ல குடிநீர், தூய்மை மற்றும் துப்புரவு செயல்முறைகளின் நன்மைகள் பற்றி உள்ளூர் மக்களுக்கும் அருகிலுள்ள பள்ளிகளுக்கும் விழிப்புணர்வினை ஏற்படுத்துவதன் மூலம் கியாஸ்க் ஒரு குடிநீர் அறிவு வள மையமாகச் செயல்படும்.