கூட்டுறவுத் துறையில் உலகின் மிகப்பெரிய தானியங்கள் சேமிப்புத் திட்டத்தின் கீழ், மத்தியப் பிரதேசத்தின் பாலகாட், முன்னோடி மாவட்டமாகத் தேர்ந்தெடுக்கப் பட்டு உள்ளது.
பர்ஸ்வாடாவில் உள்ள முதன்மை வேளாண் கடன் சங்கம் (PACS) அமைப்பால் 500 மெட்ரிக் டன் (MT) கிடங்கு கட்டப்பட்டது.
வேளாண் உள்கட்டமைப்பு நிதி (AIF) மற்றும் வேளாண் சந்தைப்படுத்தல் உள் கட்டமைப்பு (AMI) திட்டம் போன்ற திட்டங்களை ஒன்றிணைப்பதன் மூலம் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
AIF இன் கீழ், PACS சேமிப்பு உள்கட்டமைப்பை உருவாக்குவதற்கான கடன்களுக்கு வட்டி மானியத்தைப் பெறுகிறது.
AMI இன் கீழ் PACS-களுக்கான மானியம் 33.33% ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
பரவலாக்கப்பட்ட சேமிப்பு வசதிகள் மூலம் விவசாயிகளின் அறுவடைக்குப் பிந்தைய இழப்புகளைக் குறைப்பதும், விற்பனையில் ஏற்படும் சிரமங்களைத் தடுப்பதும் இந்த முயற்சியின் நோக்கமாகும்.