TNPSC Thervupettagam

உலகின் மிக உயரமான தூண் பாலம்

December 1 , 2021 1491 days 787 0
  • இந்திய இரயில்வே நிர்வாகமானது மணிப்பூரில் உலகின் மிக உயரமான ஒரு தூண் இரயில் பாலத்தைக் கட்டமைத்து வருகிறது.
  • மணிப்பூரில் இரயில்வே நிர்வாகம் மேற்கொள்ளும் இந்தத் திட்டமானது ஜிரிபம் – இம்பால் இரயில்வே பாதையின் ஒரு பகுதியாகும்.
  • இந்தப் பாலமானது 141 மீட்டர் உயரத்தில் கட்டப்பட்டு வருகிறது.
  • மணிப்பூர் பாலத்தின் மொத்த நீளமானது 703 மீட்டர் ஆகும்.
  • தற்போது ஐரோப்பாவின் மாண்டினீக்ரோ எனுமிடத்தில் கட்டமைக்கப்பட்ட 139 மீட்டர் உயரமான மலா-ரிஜேகா  (Mala-Rijeka) என்ற உயர்கோபுரப் பாலமானது ஒரு உயரமான தூண் பாலமாக குறிப்பிடப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்