கங்கா விரைவுப் பாதையை கட்டுமானம் செய்வதற்கு உத்தரப் பிரதேச அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
மேலும் இந்த பாதையானது உலகின் மிக நீளமான விரைவுப் பாதையாக இருக்கும் எனவும் அறிவித்துள்ளது.
இந்த விரைவுப் பாதையானது பிரயாக்ராஜ் (அலகாபாத்) எனும் நகரிலிருந்து மேற்கு உத்திரப் பிரதேசத்திற்கு சிறந்த இணைப்பை அளிக்கும்.
இந்தியாவில் உள்ள சாலைகள் அமைப்பில் விரைவுப் பாதை என்பது உயர் தரமான சாலைகளாகும்.
மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள தேசிய நெடுஞ்சாலைத் துறை ஆணையமானது விரைவுப் பாதைகளின் கட்டுமானம் மற்றும் பராமரிப்பிற்குப் பொறுப்புடையதாகும்.