கியூபா நாடானது சோபெர்னா 2 (காவெரைன் 2) எனப்படும் உலகின் முதலாவது கோவிட்-19 இணைத் தடுப்பு மருந்தினை உருவாக்கியுள்ளது.
சோபெர்னா 2 தடுப்பு மருந்தானது மூன்று தவணைகளில் செலுத்தப்படுகிறது.
இது சோபெர்னா 2 தடுப்பு மருந்தின் இரண்டு தவணைகளையும் சோபெர்னா பிளஸ் தடுப்பு மருந்தின் ஒரு தவணையையும் கொண்டது.
சோபெர்னா 2 தடுப்பு மருந்தினை சோபெர்னா பிளஸ் எனும் ஒரு உந்து மருந்துடன் செலுத்தும் போது அறிகுறிகளுடைய கோவிட்-19பாதிப்புகளுக்கு எதிராக அது 91 சதவீதச் செயல்திறனை வழங்கும்.
இதற்கு ஒப்புதல் வழங்கப் பட்டால் கோவிட்-19 தொற்றுக்கு எதிரான தடுப்பு மருந்தினைத் தயாரித்த முதல் லத்தீன் அமெரிக்க நாடாக கியூபா உருப் பெறும்.
சோபெர்னா 2 மருந்தானது மூலக்கூறு நோயெதிர்ப்பு மையம் மற்றும் தேசிய உயிரி பொருள் உற்பத்தி மையம் ஆகியவற்றுடன் இணைந்து ஃபின்லே நிறுவனத்தினால் (Finlay Institute) உருவாக்கப்பட்டது.
இணைத் தடுப்பு மருந்து (conjugate vaccine) என்பது ஒரு பலவீனமான ஆன்டிஜனை வலுவான ஆன்டிஜனோடு சேர்த்து அதனை ஒரு வைரஸ் தாங்கியாக அமைக்கிறது.
இதனால் உடலின் நோயெதிர்ப்பு அமைப்பானது பலவீனமான ஆன்டிஜனுக்கு எதிராக வலுவான முறையில் செயல்படுகிறது.