TNPSC Thervupettagam

உலகின் முதல் திட்டமிடப்பட்ட இடம்பெயர்வு - துவாலு

July 24 , 2025 3 days 56 0
  • பசிபிக் தீவில் வசிப்பவர்களுக்கு வழங்கும் முதல் வகையான இடம்பெயர்வு நுழைவு இசைவிற்கு 5,000க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர்.
  • அதன் விதிமுறைகளின் கீழ், 2025 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 280 துவாலுவாசிகள் ஒரு வகை தேர்ந்தெடுப்பு முறை மூலம் ஆஸ்திரேலியாவுக்கு இடம் பெயரலாம்.
  • இது உலகின் முதல் திட்டமிடப்பட்ட இடம்பெயர்வு ஆகும் என்பதோடு இது துவாலுவில் வசிப்பவர்களுக்கு வாழ்வதற்கான உரிமையை வழங்குகிறது.
  • துவாலு நாடானது தெற்கு பசிபிக் பெருங்கடலில் ஆஸ்திரேலியாவிற்கும், ஹவாய்க்கும் இடையில் அமைந்துள்ளது.
  • இந்த நாடானது பவளப்பாறைகளால் சூழப்பட்ட வளைய வடிவ தீவுகளைக் கொண்ட ஒன்பது தாழ்வான பவளத்தீவுகளை/அடோல்களைக் கொண்டுள்ளது.
  • துவாலுவின் மிக உயரமான இடம் கடல் மட்டத்திலிருந்து 15 அடி (4.5 மீட்டர்) உயரத்தில் உள்ளது, ஆனால் நாட்டின் சராசரி உயரம் கடல் மட்டத்திலிருந்து 6 அடி (2 மீ) மட்டுமே.
  • அந்த நாட்டின் பெரும்பாலான நிலம் மற்றும் முக்கிய உள்கட்டமைப்பு 2050 ஆம் ஆண்டுக்குள் உயர் அலை மட்டத்திற்கும் கீழே செல்லக் கூடும்.
  • இது பருவநிலை மாற்றம் காரணமாக கடல் மட்ட உயர்வு, வெள்ளம் மற்றும் புயல் அலைகளுக்கு மிகவும் பாதிப்பு ஏற்படுத்தக் கூடியதாக மாற்றுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்