உலகெங்கிலும் உள்ள நெல் வயல்களில் இருந்து வெளியேறும் பசுமை இல்ல வாயுக்களின் (GHG) வெளியேற்றம் 1960-களில் இருந்து இருமடங்காகியுள்ளது.
உலகெங்கிலும் உள்ள நெல் வயல்கள் ஆண்டுதோறும் சுமார் 1.1 பில்லியன் டன் கார்பன் டை ஆக்சைடுக்கு இணையான (CO2-e) வாயுவை வெளியிடுகின்றன என்ற நிலையில் இது 1961 மற்றும் 1980-ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட ஆண்டு வெளியேற்றத்தை விட 90.4% அதிகமாகும்.
இந்தியாவின் நெல் வயல்கள் தற்போது உலகின் முன்னணி மீத்தேன் மையங்களில் ஒன்றாகத் திகழ்கின்றன.
இது ஜெர்மனியின் மொத்த ஆண்டு மீத்தேன் வெளியேற்றத்தை விட அதிகமாக இருந்தது.
மேலும், கிழக்கு இந்தியாவில் உள்ள நெல் வயல்கள் உலகளாவிய மீத்தேன் மையங்களில் ஒன்றாக இருந்தன.
மண்ணின் கரிம கார்பனைத் தவிர, நெல் வயல்களில் இருந்து வெளியேறும் மீத்தேனும் இந்த வெளியேற்றத்திற்கு ஒரு முக்கிய காரணமாக இருந்தது.
நீர் நிரம்பிய வயல்களில் குறைந்த ஆக்சிஜன் சூழல் உருவாகிறது, அங்கு மீத்தேன் உற்பத்தி செய்யும் நுண்ணுயிரிகள் செழித்து வளர்கின்றன.
2025-26-ஆம் ஆண்டில் 154 மில்லியன் டன் அரிசியை உற்பத்தி செய்து, அரிசி உற்பத்தியில் இந்தியா நாடுகளின் பட்டியலில் முதலிடம் வகிக்கிறது.
1970-களிலிருந்து நெல் சாகுபடி செய்யப்படும் பரப்பளவும் சுமார் 25% அதிகரித்துள்ளதுடன், தற்போது இந்தியாவின் மானாவாரி அறுவடைப் பரப்பில் 55%-ஐ இது உள்ளடக்கியுள்ளது.