இந்தத் தினமானது, மிகத் தரமான உள்கட்டமைப்பை வலுப்படுத்துதல், உலகளாவிய வர்த்தகத்தைச் செயல்படுத்துதல் மற்றும் பொருளாதார மேம்பாட்டினை மிக நன்கு ஊக்குவித்தல் போன்றவற்றில் அங்கீகார வழங்கீட்டின் பெரும்பங்களிப்பை எடுத்துக் காட்டுகிறது.
இந்தியாவில் அங்கீகார வழங்கலின் தேசிய அளவிலான பொறுப்பினை இந்தியத் தர நிர்ணய சபை (QCI) கொண்டுள்ளது.
QCI ஆனது 1997 ஆம் ஆண்டில் தொழில்துறை மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறையின் (DPIIT) கீழ் ஒரு தன்னாட்சி பெற்ற அமைப்பாக நிறுவப்பட்டது.
2025 ஆம் ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு, "Accreditation: Empowering Small and Medium Enterprises (SMEs)" என்பதாகும்.