உலக அணுசக்தி சங்கமானது உலக அணுசக்தி கண்ணோட்ட அறிக்கை 2026-ஐ வெளியிட்டது.
2050ம் ஆண்டிற்குள் உலகளாவிய அணுசக்தி உற்பத்தித் திறன் என்பது 1,446 ஜிகாவாட் மின்சாரத்தை (GWe) எட்டக் கூடும் என்ற ஒரு நிலைமையில் இது அணுசக்தியை மும்மடங்காக்குவதற்கான பிரகடனத்தின் கீழ் நிர்ணயிக்கப்பட்ட 1,200 GWe இலக்கை விட அதிகமாகும்.
சீனா, பிரான்ஸ், இந்தியா, ரஷ்யா மற்றும் அமெரிக்கா ஆகிய ஐந்து நாடுகள் 980 ஜிகா வாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யக்கூடியவை என்ற நிலையில்இது உலகளாவிய அணுசக்தித் திறனில் பெரும்பகுதியை உள்ளடக்கியுள்ளது.
நீண்ட கால கார்பன் வெளியேற்றக் குறைப்பு, கார்பன் டை ஆக்சைடு உமிழ்வைக் குறைத்தல் மற்றும் உலகளவில் எரிசக்திப் பாதுகாப்பை மேம்படுத்துதல் ஆகியவற்றிற்காக அணுசக்தி பரிந்துரைக்கப்படுகிறது.
சரிநிலை வளர்ச்சிக்காக மின்சாரச் சந்தைகளில் சீர்திருத்தங்களை அந்த அறிக்கை பரிந்துரைக்கிறது மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களுக்குக் குறைந்த கார்பன் உமிழ்வு கொண்ட ஒரு மாற்றாக அணுசக்தியை வலியுறுத்துகிறது.