TNPSC Thervupettagam

உலக அரிவாள் வடிவ உயிரணு சோகை நோய் விழிப்புணர்வு தினம் 2026 - ஜூன் 19

June 22 , 2026 16 days 165 0
  • அரிவாள் வடிவ உயிரணு சோகை நோய் பற்றிய உலகளாவிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதை இந்த தினம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • அரிவாள் வடிவ உயிரணு சோகை நோய் என்பது ஒரு மரபணு கோளாறு ஆகும், இது ஒவ்வொரு ஆண்டும் உலகளவில் 3,00,000 க்கும் மேற்பட்ட பிறப்புகளைப் பாதிக்கிறது.
  • குறிப்பாக பழங்குடியினர் மற்றும் விளிம்புநிலை சமூகங்கள் மத்தியில், அரிவாள் வடிவ உயிரணு சோகை நோயின் அதிக சுமையைக் கொண்ட இரண்டாவது நாடாக இந்தியா உள்ளது.
  • அசாதாரண ஹீமோகுளோபின் காரணமாக இரத்த சிவப்பணுக்கள் அரிவாள் வடிவில் மாறுவதால் இந்நோய் ஏற்படுகிறது மற்றும் இது ஆக்ஸிஜன் போக்குவரத்தை பாதிக்கிறது.
  • ஐக்கிய நாடுகள் (UN) பொதுச் சபை (2008 தீர்மானம்) உலகளாவிய விழிப்புணர்வுக்காக ஜூன் 19-ஐ உலக அரிவாள் வடிவ உயிரணு சோகை நோய் விழிப்புணர்வு தினமாக அறிவித்தது.
  • 2026 ஆம் ஆண்டிற்கான கருத்துரு Closing the Survival Gap: Equity in Sickle Cell Disease என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்