உலக அரிவாள் வடிவ உயிரணு சோகை நோய் விழிப்புணர்வு தினம் 2026 - ஜூன் 19
June 22 , 2026 16 days 165 0
அரிவாள் வடிவ உயிரணு சோகை நோய் பற்றிய உலகளாவிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதை இந்த தினம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
அரிவாள் வடிவ உயிரணு சோகை நோய் என்பது ஒரு மரபணு கோளாறு ஆகும், இது ஒவ்வொரு ஆண்டும் உலகளவில் 3,00,000 க்கும் மேற்பட்ட பிறப்புகளைப் பாதிக்கிறது.
குறிப்பாக பழங்குடியினர் மற்றும் விளிம்புநிலை சமூகங்கள் மத்தியில், அரிவாள் வடிவ உயிரணு சோகை நோயின் அதிக சுமையைக் கொண்ட இரண்டாவது நாடாக இந்தியா உள்ளது.
அசாதாரண ஹீமோகுளோபின் காரணமாக இரத்த சிவப்பணுக்கள் அரிவாள் வடிவில் மாறுவதால் இந்நோய் ஏற்படுகிறது மற்றும் இது ஆக்ஸிஜன் போக்குவரத்தை பாதிக்கிறது.
ஐக்கிய நாடுகள் (UN) பொதுச் சபை (2008 தீர்மானம்) உலகளாவிய விழிப்புணர்வுக்காக ஜூன் 19-ஐ உலக அரிவாள் வடிவ உயிரணு சோகை நோய் விழிப்புணர்வு தினமாக அறிவித்தது.
2026 ஆம் ஆண்டிற்கான கருத்துரு Closing the Survival Gap: Equity in Sickle Cell Disease என்பதாகும்.