50,000 மெட்ரிக் டன் அளவில் கோதுமையை விநியோகம் செய்வதற்காக ஐக்கிய நாடுகளின் உலக உணவுத் திட்டத்துடன் இந்தியா ஒப்பந்தம் செய்துள்ளது.
மனிதாபிமான அடிப்படையிலான ஒரு உதவியாக இந்தியா இந்த உதவியை ஆப்கானிஸ்தானுக்கு வழங்குகிறது.
இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி, கோதுமைப் பொதிகள் அடங்கிய சரக்குப் பெட்டகங்கள் பாகிஸ்தான் வழியாக ஆப்கானிஸ்தானின் எல்லைப் புறப் பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டு கந்தஹாரில் உள்ள உலக உணவுத் திட்ட அமைப்பின் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படும்.