1978-ஆம் ஆண்டில் பிறந்த உலகின் முதல் செயற்கை கருத்தரிப்பின் (IVF) மூலம் பிறந்த குழந்தையான லூயிஸ் பிரவுனின் பிறப்பை நினைவு கூரும் வகையில் இந்த நாள் அனுசரிக்கப் படுகிறது.
செயற்கை கருத்தரிப்பு (IVF) என்பது ஒரு துணை இனப்பெருக்க தொழில்நுட்பம் (ART) ஆகும் இதில், கருவானது கருப்பைக்கு மாற்றப்படுவதற்கு முன்பு, ஆய்வகத்தில் ஒரு முட்டையுடன் விந்தணு கருவுறச் செய்யப்படுகிறது.
மலட்டுத்தன்மை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துதல், களங்கத்தைக் குறைத்தல், இனப்பெருக்க ஆரோக்கியத்தை மேம்படுத்துதல் மற்றும் கருவுறுதல் சிகிச்சைக்கான அணுகலை மேம்படுத்துதல் ஆகியவற்றை இந்த தினம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
அடைபட்ட கருக்குழாய்கள், ஆண்களின் மலட்டுத்தன்மை, அண்டவிடுப்பின் கோளாறுகள், எண்டோமெட்ரியோசிஸ், விவரிக்க முடியாத மலட்டுத்தன்மை அல்லது வயது தொடர்பான மலட்டுத்தன்மை உள்ளவர்களுக்கு IVF உதவக்கூடும்.
நவீன IVF நடைமுறைகள் பல கருவுறுதல்களைக் குறைப்பதற்காக பெரும்பாலும் ஒற்றை கரு மாற்று முறையைப் பயன்படுத்துகின்றன, மேலும் பெரும்பாலான IVF குழந்தைகள் ஆரோக்கியமாகவும் இயல்பாகவும் வளர்கின்றன.