இந்த நாள் கடலின் பழமையான மற்றும் கண்கவர் உயிரினங்களில் ஒன்றைக் கொண்டாடுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
ஜெல்லிமீன்கள் டைனோசர்களுக்கு முன்னதாகவே, 500 மில்லியன் ஆண்டுகளுக்கும் மேலாக உள்ளன.
அவற்றுக்கு மூளை, இதயம் மற்றும் எலும்புகள் இல்லை என்றாலும் ஒளி மற்றும் இயக்கத்தை உணர உதவும் நரம்பு வலையமைப்புகள் உள்ளன.
டூரிடோப்சிஸ் டோஹ்ர்னி போன்ற சில இனங்கள் இளமை நிலைக்குத் திரும்பி கால வரையின்றி வாழ முடியும் என்பதால், "அழியாத ஜெல்லிமீன்கள்" என்று அழைக்கப் படுகின்றன.
பல ஜெல்லிமீன்கள் ஒளியை உற்பத்தி செய்து உயிர்வாழ்வதற்குப் பயன்படுத்தப் படுகின்ற "உயிரொளிர்வு" திறன் கொண்டவை (பயோலுமினசென்ட்) என மரபணு ஆராய்ச்சியில் ஆய்வு செய்யப் பட்டுள்ளது.