மிக நாள்பட்ட, பெரும்பாலும் உடல் உறுப்பு செயல்பாடுகளை முடக்கும் வகையிலான ஒரு நரம்பியல் நோயான தண்டுவட மரப்பு நோய் (MS) பற்றி முக்கிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இதன் நோக்கமாகும்.
தண்டுவட மரப்பு நோய் என்பது ஒரு நாள்பட்ட நரம்பியல் நோயாகும் என்பதோடு இதில் நோயெதிர்ப்பு அமைப்பு ஆனது நரம்பு இழைகளின் பாதுகாப்பு உறையைத் தவறாகத் தாக்குகிறது.
இது மூளைக்கும் உடலின் மற்றப் பகுதிகளுக்கும் இடையிலான தொடர்பில் பல்வேறு சிக்கல்களுக்கு வழி வகுக்கிறது.
2009 ஆம் ஆண்டு இந்த நாளில் தான், மலையேற்ற வீரர் லோரி ஷ்னைடர் எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த முதல் தண்டுவட மரப்பு நோயாளி ஆனார்.
இந்த ஆண்டு இத்தினமானது "My MS Diagnosis" என்ற தலைப்பில் "Navigating MS Together" என்ற முழக்கத்துடன் அனுசரிக்கப் பட்டது.