சர்வதேச நாணய நிதியமானது இந்த அறிக்கையை வெளியிட்டது.
இது உலக நிதிச் சந்தையின் உறுதித் தன்மையை மதிப்பிடுவதற்கான அரையாண்டு அறிக்கையாகும்.
2020 ஆம் ஆண்டில் வெளியான ஒரு உலக நுகர்வோர் ஆய்வின்படி, அதில் பங்கேற்றவர்களில் 99% பேர் தாங்கள் இணைய சங்கேதப் பணம் மீது வர்த்தகம் செய்ததாகப் பதிலளித்தனர்.
நைஜீரியா, வியட்நாம் மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகள் இந்த ஆய்வில் முதலிடத்தில் உள்ளன.
இணைய சங்கேதப் பண ஏற்புத் தன்மையில் சீனா, அமெரிக்கா, ஜெர்மனி மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளை விட இந்தியா உயர் மதிப்பில் உள்ளது.
பெரும்பாலும் புழக்கத்தில் உள்ள இணைய சங்கேதப் பணமாக பிட்காயின் உள்ளதாக இந்த அறிக்கை கூறுகிறது.