TNPSC Thervupettagam

உலக வங்கியின் காற்று மாசுபாடு குறித்த அறிக்கை

February 7 , 2026 10 days 60 0
  • உலக வங்கி, சிந்து-கங்கை சமவெளி மற்றும் இமயமலை அடிவாரப் பகுதிகளில் காற்று மாசுபாடு குறித்த “A Breath of Change” என்ற 2025 அறிக்கையை வெளியிட்டது.
  • இந்த அறிக்கை வங்காளதேசம், பூடான், இந்தியா, நேபாளம் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த 13 அதிகார வரம்புகளை உள்ளடக்கியது.
  • இந்தப் பிராந்தியத்தில் காற்று மாசுபாடு காரணமாக ஒவ்வொரு ஆண்டும் சுமார் 1 மில்லியன் மக்கள் முன்கூட்டியே இறக்கின்றனர்.
  • மாசுபாட்டினால் ஏற்படும் பொருளாதார இழப்பு, இந்த பிராந்தியத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஆண்டுதோறும் சுமார் 10% ஆகும்.
  • சிந்து-கங்கை சமவெளி மற்றும் இமயமலை அடிவாரப் பகுதி, உலகின் மிக உயர்ந்த காற்று மாசுபாடு அளவுகளைக் கொண்டுள்ளது என்பதோடு இங்குள்ள PM2.5 என்ற துகள்களின் அளவு, உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டுதல்களை விட 8 முதல் 20 மடங்கு அதிகமாக உள்ளது.
  • இந்த அறிக்கை, காற்று மாசுபாட்டின் அளவைக் குறைப்பதற்கான “35 by 35” என்ற இலக்கை ஆதரிக்கிறது.
  • இது தகவல், ஊக்கத்தொகைகள், நிறுவனங்கள் மற்றும் உள்கட்டமைப்பு ஆகிய “4I” கட்டமைப்பு மூலம் தீர்வுகளைப் பரிந்துரைக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்