உலக வெறிநாய்க்கடி நோய் (ரேபிஸ்) தினம் – 28 செப்டம்பர்
September 29 , 2021 1631 days 780 0
இந்த வைரஸ் நோயின் தாக்கம் மற்றும் அதை எவ்வாறு தடுப்பது என்பது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இத்தினமானது அனுசரிக்கப் படுகிறது.
வெறிநாய்க்கடி நோய்க்கான முதல் தடுப்பு மருந்தினை உருவாக்கிய லூயிஸ் பாஸ்டர் அவர்களுடைய நினைவு நாளை நினைவுகூறும் வகையில் உலகளவில் இத்தினமானது அனுசரிக்கப் படுகிறது.
இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, “வெறிநாய்க்கடி நோய் : உண்மைகள், பயம் அல்ல” (Rabies : Facts, not fear) என்பதாகும்.