- இந்த ஆண்டு உலக வேளாண் சுற்றுலா தினத்தன்று சர்வதேச வேளாண் சுற்றுலா மாநாட்டினை மகாராஷ்டிர அரசின் வேளாண் சுற்றுலா மேம்பாட்டுக் கழகமானது ஏற்பாடு செய்ய உள்ளது.
- 2021 ஆம் ஆண்டிற்கான கருத்துரு, “வேளாண் சுற்றுலா மூலம் கிராமப் பெண்களுக்கு நிலையான தொழில்முனைவு வாய்ப்புகளை ஏற்படுத்துதல்” (Rural Women Sustainable Entrepreneurship Opportunities through Agri Tourism) என்பதாகும்.
வேளாண் சுற்றுலா – மஹாராஷ்டிரா
- நாட்டின் வேளாண் சுற்றுலாத் துறையினை உருவாக்குவதிலும் மேம்படுத்துவதிலும் மகாராஷ்டிரா மாநிலம் முன்னோடியாக உள்ளது.
- 2020 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் மகாராஷ்டிரா அரசானது வேளாண் சுற்றுலாக் கொள்கையினை நிறைவேற்றியது.
- இந்தக் கொள்கையானது சுற்றுலாப் பயணிகளுக்கு வேளாண் சார்ந்த மகிழ்ச்சி உணர்வினை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டதோடு விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கவும் உதவுகிறது.
வேளாண் – சுற்றுலா
- வேளாண் சுற்றுலாவில் நகர்ப்புற சுற்றுலாப் பயணிகள் விவசாயிகளின் வீட்டில் தங்கியிருப்பர்.
- அவர்கள் அங்கு தங்கியிருக்கும் போது விவசாய வேலைகள், டிராக்டர் பயணம், மாட்டு வண்டிப் பயணம் போன்றவற்றில் ஈடுபடுவர்.
- அவர்கள் சுத்தமான விவசாய விளைபொருட்களை வாங்கிச் செல்வர்.
- இது விவசாயிகளுக்கு ஒரு கூடுதல் வருமானமாக இருக்கும்.
