இந்திய நாடானது உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட தனது முதல் இயந்திர வழி ரத்தக் குழாய் குருதி உறைவு நீக்க (த்ரோம்பெக்டமி) சாதனத் தயாரிப்பினைத் தொடங்க உள்ளது.
இதற்கு தொழில்நுட்ப மேம்பாட்டு வாரியம் (TDB) ஆனது நிதி உதவி அளிக்க ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த முன்னெடுப்பானது, மைசூரில் உள்ள S3V வாஸ்குலர் டெக்னாலஜிஸ் (இரத்த நாள அறுவை சிகிச்சை தொழில்நுட்ப நிறுவனத்தினால்) முன்னெடுத்து மேற்கொள்ளப் படுகிறது.
இது முக்கியமான பக்கவாதப் பராமரிப்பு கருவிகளைத் தயாரிப்பதற்கு தமிழ்நாட்டின் ஸ்ரீபெரும்புதூர் அருகே ஓர் ஒருங்கிணைந்த உற்பத்தி மையத்தினை நிறுவ உள்ளது.
த்ரோம்பெக்டமி சாதனம் என்பது இஸ்கிமிக் வகை (இரத்தக் குழாய் அடைப்பினால் ஏற்படும்) பக்கவாதங்களுக்கு சிகிச்சையளிக்க வேண்டி இரத்த நாளங்களில் இருந்து, குறிப்பாக மூளையில் உள்ள இரத்தக் கட்டிகளை அகற்றப் பயன்படுத்தப்படும் ஒரு சிறப்பு மருத்துவக் கருவியாகும்.
2021 ஆம் ஆண்டில் மட்டும் இந்தியாவில் சுமார் 1.25 மில்லியனுக்கும் அதிகமான புதிய பக்கவாதப் பாதிப்புகள் பதிவாகியுள்ளன என்பதோடு 1990 ஆம் ஆண்டில் பதிவான 650,000 பாதிப்புகளுடன் ஒப்பிடும் போது இது 51 சதவீதம் அதிகமாகும்.