ஊடுருவல் இனங்களினால் ஆப்பிரிக்க வேளாண்மையில் வருடத்திற்கு 3.66 டிரில்லியன் டாலர் அளவிற்கு இழப்புகள் ஏற்படுகிறது என சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
இது அனைத்து ஆப்பிரிக்க நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 1.5 மடங்குக்குச் சமமாகும்.
தோரீமியா அப்சொலூட்டா எனப்படும் அந்துப்பூச்சி தான் (வண்டு) பெரும்பாலான இழப்புகளை ஏற்படுத்தியுள்ளதாகக் கண்டறியப் பட்டுள்ளது.
இந்த அந்துப்பூச்சியானது தக்காளிச் செடிகளைத் தாக்கி ஆண்டுக்கு 11.4 பில்லியன் டாலர் மதிப்பிலான இழப்பினைஏற்படுத்துகின்றது.
மற்றப் பூச்சிகள் சோளம், மாங்காய், மரவள்ளிக் கிழங்கு மற்றும் சிட்ரஸ் வகைப் பயிர்களைத் தாக்கி ஆண்டுக்கு 21.5 பில்லியன் டாலர் மதிப்பிலான அளவிற்கு இழப்பினை ஏற்படுத்துகின்றன.