ஊழல் விழிப்புணர்வு வாரம் - அக்டோபர் 28 முதல் நவம்பர் 2 வரை
October 30 , 2019 2255 days 687 0
அக்டோபர் மாதத்தின் கடைசி வாரமானது ஊழல் விழிப்புணர்வு வாரமாக மத்திய ஊழல் தடுப்பு ஆணையத்தின் (Central Vigilance Commission - CVC) ஆதரவின் கீழ் அனுசரிக்கப் படுகின்றது.
இவ்வருடம் அந்த வாரமானது அக்டோபர் 28 முதல் நவம்பர் 2 ஆகிய காலத்தில் வருகின்றது.
இந்த அனுசரிப்பு பொதுமக்களிடையே ஊழல் பற்றிய விழிப்புணர்வை அதிகரிப்பதோடு இதர பங்குதாரர்களையும் ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்றிட ஊக்குவிக்கின்றது.
இந்த அனுசரிப்பின் கருத்துரு “நேர்மை என்பது வாழ்வியலுக்கான ஒரு வழியாகும்”.
மத்திய ஊழல் தடுப்பு ஆணையம் தற்சமயம் 1979ம் ஆண்டு இந்தியக் காவல் பணி அதிகாரியான சரத் குமார் என்பரால் தலைமை தாங்கப்படுகின்றது.