முக்கியமான இந்திய வங்கிகள் ஆனது, எண்ணிமப் பண வழங்கீட்டு கண்காணிப்பு/ புலனாய்வுத் தளத்தினை (DPIP) உருவாக்குவதற்காக என்று இந்திய ரிசர்வ் வங்கியுடன் இணைந்து செயல்படுகின்றன.
நிகழ்நேரப் புலனாய்வுப் பகிர்வு மூலம் எண்ணிமப் பண வழங்கீட்டு மோசடிகளைக் குறைப்பதே இதன் குறிக்கோள் ஆகும்.
பாதுகாப்பானப் பரிவர்த்தனைகளுக்கான எண்ணிமப் பொது உள்கட்டமைப்பாக DPIP செயல்படும்.
இந்திய ரிசர்வ் வங்கியின் புத்தாக்க மையம் (RBIH) ஆனது, 5 முதல் 10 வங்கிகளுடன் இணைந்து இதற்கான முன்மாதிரியை உருவாக்கி வருகிறது.
மோசடியைக் கண்டறிந்து தடுக்க என்று இந்தத் தளம் செயற்கை நுண்ணறிவு மற்றும் பகுப்பாய்வு போன்ற மேம்படுத்த்தப் பட்ட தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தும்.
2025 ஆம் நிதியாண்டில், வங்கி மோசடிகளில் சிக்கிய மொத்தத் தொகை 36,014 கோடி ரூபாயாக உயர்ந்தது என்ற நிலையில் இது 2024 ஆம் நிதியாண்டில் பதிவான 12,230 கோடி ரூபாயை விட கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகமாகும்.