TNPSC Thervupettagam

எத்திலீன் கிளைக்கால் (தரக் கட்டுப்பாடு) ஆணை, 2022

January 13 , 2023 949 days 441 0
  • இரசாயனம் மற்றும் பெட்ரோலிய இரசாயனத் துறையானது இரசாயன மற்றும் உரங்கள் அமைச்சகத்துடன் இணைந்து, எத்திலீன் கிளைக்கால் (தரக் கட்டுப்பாடு) ஆணை, 2022 என்ற தலைப்பிலான ஒரு அரசிதழ் அறிவிப்பை வெளியிட்டது.
  • இந்திய மருந்து தயாரிப்பு நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்ட மருந்துக் கரைசலை உட் கொண்டதால், சமர்க்கண்டில் 18 குழந்தைகள் இறந்ததாக உஸ்பெகிஸ்தான் அரசு குற்றம் சாட்டியதனையடுத்து ஒரு நாளுக்குப் பிறகு இந்த நடவடிக்கையானது மேற் கொள்ளப் பட்டுள்ளது.
  • இதில் சர்ச்சைக்குரிய மருந்து நிறுவனமான மரியன் பயோடெக், உத்தரப் பிரதேச மாநிலத்தின் நொய்டாவில் அமைந்துள்ளது.
  • இந்நிறுவனம் தயாரித்த மருந்துக் கரைசலில் எத்திலீன் கிளைக்கால் இருந்தது.
  • எத்திலீன் கிளைக்கால் என்பது, உட்கொண்டால் மரணத்தை விளைவிக்கின்ற ஒரு நிறமற்ற மற்றும் மணமற்ற ஆல்கஹால் கலவையாகும்.
  • இது பெரும்பாலும் வாகனங்களில் உறைதல் தடுப்பானாகவும் பாலிஸ்டர் இழைகளை தயாரிப்பதற்கான மூலப்பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது.
  • டைஎத்திலீன் கிளைக்கால் மற்றும் எத்திலீன் கிளைக்கால் ஆகியவை சில நேரங்களில் சட்ட விரோதமாக திரவ மருந்துகளில் கரைப்பான்களாகப் பயன்படுத்தப்படுகின்ற கலப்படப் பொருளாகும்.
  • மருந்து உற்பத்தி நிறுவனங்கள் செலவைக் குறைப்பதற்காக கிளிசரின் அல்லது ப்ரோப்பிலீன் கிளைக்கால் போன்ற நச்சுத்தன்மையற்ற கரைப்பான்களுக்கு மாற்றாக டைஎத்திலீன் கிளைக்கால் மற்றும் எத்திலீன் கிளைக்கால் ஆகியவற்றினைப் பயன்படுத்துகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்