TNPSC Thervupettagam

ஏகலைவா மாதிரிப் பள்ளிகள் தொடக்கம்

September 14 , 2019 2117 days 1237 0
  • நாடு முழுவதும் பழங்குடியினர் அதிகம் வாழும் பகுதிகளில் 462 ஏகலைவா மாதிரிக் குடியிருப்புப் பள்ளிகளை (Ekalavya Model Residential Schools - EMRS) பிரதமர் மோடி தொடங்கினார்.
  • இந்தப் பள்ளிகள் இந்தப் பகுதிகளில் உள்ள பழங்குடியின மாணவர்களுக்குத் தரமான தொடக்க நிலை, இடை நிலை மற்றும் உயர் இடை நிலைக் கல்வியை வழங்குவதற்குக் கவனம் செலுத்துகின்றன.
  • இது மத்திய பழங்குடி விவகார அமைச்சகத்தினால் செயல்படுத்தப்படுகின்றது.

இதுபற்றி
  • EMRS என்பது இந்தியா முழுவதும் உள்ள இந்தியப் பழங்குடியினருக்கு (பட்டியல் பழங்குடியினர்) மாதிரிக் குடியிருப்புப் பள்ளிகளை ஏற்படுத்துவதற்கான இந்திய அரசின் ஒரு திட்டமாகும்.
  • இது 1997-98 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது.
  • அவை இந்திய அரசியலமைப்பின் சரத்து 275 (1) இன் கீழ் மானியங்களுடன் மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களில் அமைக்கப் பட்டிருக்கின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்