பத்ம பூஷண் விருது பெற்ற பேராசிரியர் ஏக்நாத் வசந்த் சிட்னிஸ் காலமானார்.
டாக்டர் விக்ரம் சாராபாயின் நெருங்கிய துணைவராக இருந்த சிட்னிஸ், இஸ்ரோவாக மாறிய இந்திய தேசிய விண்வெளி ஆராய்ச்சிக் குழுவை (INCOSPAR) வடிவமைக்க உதவினார்.
இந்தியாவின் முதல் ஏவு வாகன ஏவுதல்களுக்காக கேரளாவில் உள்ள தும்பாவைத் தேர்ந்தெடுத்தார் என்பதோடுபின்னர் ஸ்ரீஹரிகோட்டாவில் ஓர் ஏவுதளத்தை நிறுவ அவர் உதவினார்.
1975–76 ஆம் ஆண்டில் சிட்னிஸ் செயற்கைக் கோள் வழித் தொலைக்காட்சி வழி காட்டல் ஒளிபரப்பு பரிசோதனையை (SITE) வழி நடத்தினார் என்பதோடுநாசாவின் ATS-6 செயற்கைக் கோளைப் பயன்படுத்தி சுமார் 2,400 கிராமங்களுக்கு இது கல்வித் திட்டங்களைக் கொண்டு வந்தது.
அவர் இந்தியத் தலைமைச் செய்தி முகமையின் தலைவராகவும் இருந்தார் மற்றும் சாவித்ரிபாய் புலே புனே பல்கலைக்கழகத்தில் பேராசியராகவும் இருந்தார்.