TNPSC Thervupettagam

ஏமனில் புதிய அரசியலமைப்பு

January 17 , 2026 5 days 35 0
  • பிரிவினைவாத குழுக்களின் கூட்டணியான ஏமனின் தெற்கு இடைக்கால சபை (STC), "தெற்கு அரேபியா அரசிற்கான" புதிய அரசியலமைப்பை அறிவித்தது.
  • அவை வடக்கு ஏமனில் இருந்து சுதந்திரத்தை பெறுவதை நோக்கமாகக் கொண்டு உள்ளனர்.
  • STC ஆனது ஐடாரஸ் காசெம் அல்-ஜுபைடியின் கீழ் 2017 ஆம் ஆண்டில் உருவாக்கப் பட்டது.
  • இது ஆரம்பத்தில் ரியாத் ஒப்பந்தத்தின் மூலம் ஏமன் அரசாங்கத்தில் இணைந்தது ஆனால் பின்னர் ஏடனை மீண்டும் கைப்பற்றி 2020 ஆம் ஆண்டில் சுயாட்சியை உறுதிப்படுத்தியது.
  • 2025 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில், STC "ஆபரேஷன் பிராமிசிங் ஃபியூச்சர்" நடவடிக்கையைத் தொடங்கி, ஹட்ராமவுட் மற்றும் அல்-மஹ்ரா ஆளுகைகளின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றியது.
  • இந்தப் பகுதி ஏமனின் 80% எண்ணெய் இருப்புக்களைக் கொண்டுள்ளது.
  • சவுதி தலைமையிலான தாக்குதல்கள் விரைவில் இழந்த பிரதேசங்களை மீண்டும் கைப்பற்றின என்பதோடு மேலும் திரு. அல்-ஜுபைடி அதிபர் சபையில் இருந்து நீக்கப் பட்டு ஐக்கிய அரபு அமீரகத்திற்குத் தப்பிச் சென்றார்.
  • STC தெற்கு ஏமனுக்கு சுயாட்சியை பெற தொடர்ந்து முயல்கிறது ஆனால் பிராந்திய மற்றும் உள்நாட்டு எதிர்ப்பின் காரணமாக இரு அரசு சூழலை அடைவதில் சவால்களை எதிர்கொள்கிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்