2025 ஆம் ஆண்டு ஜூன் 01 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் வகையில் ஏற்றுமதி செய்யப் பட்ட பொருட்களின் மீதான சுங்க வரிகள் மற்றும் வரிகளை நீக்குதல் (RoDTEP) திட்டத்தினை மத்திய அரசு மீண்டும் அறிமுகப்படுத்தியுள்ளது.
முன்கூட்டிய அங்கீகாரம், ஏற்றுமதி சார்ந்த அலகுகள் (EOU) மற்றும் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் (SEZ) ஆகியவற்றின் கீழ் செயல்படும் அலகுகளுக்கு இது பயனளிக்கும்.
வேறு எந்தத் திட்டத்தின் கீழும் தள்ளுபடி செய்யப்படாத சில வரிகள் மற்றும் சுங்க வரிகளைத் திரும்ப அளிப்பதை RoDTEP திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது என்ற ஒரு நிலையில் இதன் கீழான பலன் விகிதங்கள் 0.3-4.3% வரை இருக்கும்.
அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் இந்தியாவானது தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
இந்தியா மற்றும் ஐக்கியப் பேரரசு ஆகியவை ஏற்கனவே FTA ஒப்பந்தத்தினை நிறைவு செய்துள்ளதாக அறிவித்துள்ளன.