TNPSC Thervupettagam

ஏழாவது மாநில நிதிக்குழுவின் பதவிக்காலம் நீட்டிப்பு

July 29 , 2026 16 hrs 0 min 58 0
  • தமிழ்நாடு அரசு ஏழாவது மாநில நிதிக்குழுவின் பதவிக்காலத்தை 2026 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31 முதல் 2026 ஆம் ஆண்டு டிசம்பர் 31 வரை நான்கு மாதங்களுக்கு நீட்டித்து உள்ளது.
  • இந்த ஆணையம் 2025 ஆம் ஆண்டு மே மாதத்தில் கே. அல்லாவுதீன் (ஓய்வுபெற்ற IAS அதிகாரி) தலைமையில் அமைக்கப்பட்டது.
  • இது கிராம ஊராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்கள், மாவட்ட ஊராட்சிகள், பேரூராட்சிகள், நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகளின் நிதி நிலைமையை மதிப்பாய்வு செய்கிறது.
  • உள்ளாட்சி அமைப்புகளுக்கு மாநில அரசு நிதியை பகிர்ந்தளிப்பது குறித்து இந்த ஆணையம் பரிந்துரைக்கிறது.
  • இது 2027 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 முதல் தொடங்கும் ஐந்து ஆண்டுகளை உள்ளடக்கிய தனது அறிக்கையை 2026 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்கும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்