ஏழாவது மாநில நிதிக்குழுவின் பதவிக்காலம் நீட்டிப்பு
July 29 , 2026 16 hrs 0 min 58 0
தமிழ்நாடு அரசு ஏழாவது மாநில நிதிக்குழுவின் பதவிக்காலத்தை 2026 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31 முதல் 2026 ஆம் ஆண்டு டிசம்பர் 31 வரை நான்கு மாதங்களுக்கு நீட்டித்து உள்ளது.
இந்த ஆணையம் 2025 ஆம் ஆண்டு மே மாதத்தில் கே. அல்லாவுதீன் (ஓய்வுபெற்ற IAS அதிகாரி) தலைமையில் அமைக்கப்பட்டது.
இது கிராம ஊராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்கள், மாவட்ட ஊராட்சிகள், பேரூராட்சிகள், நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகளின் நிதி நிலைமையை மதிப்பாய்வு செய்கிறது.
உள்ளாட்சி அமைப்புகளுக்கு மாநில அரசு நிதியை பகிர்ந்தளிப்பது குறித்து இந்த ஆணையம் பரிந்துரைக்கிறது.
இது 2027 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 முதல் தொடங்கும் ஐந்து ஆண்டுகளை உள்ளடக்கிய தனது அறிக்கையை 2026 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்கும்.