ஆயுதத் துறையைப் பெருநிறுவன மயமாக்குதலின் ஓரு பகுதியாக அக்டோபர் 15 அன்று ஏழு புதிய பாதுகாப்புத்துறை நிறுவனங்களை இந்திய அரசு தொடங்கியது.
இந்தப் புதிய அரசு நிறுவனங்களானது ஆயுதத் தளவாடங்கள், வாகனங்கள், வெடி மருந்துகள், ஆயுதங்கள் மற்றும் உபகரணங்கள் போன்றவற்றை உற்பத்தி செய்யும்.
2021 ஆம் ஆண்டு அக்டோபர் 01 அன்று முதல் ஆயுதத் தளவாட தொழிற்சாலை வாரியத்தைக் கலைக்கும் அரசின் ஆணையைத் தொடர்ந்து அந்த வாரியத்திலிருந்து 7 புதிய பாதுகாப்புத் துறை நிறுவனங்களைத் தொடங்கும் நடவடிக்கையானது தோன்றியது.