ஐக்கிய நாடுகளின் சர்வதேச குழந்தைகள் அவசர நிதிய தினம் - டிசம்பர் 11
December 16 , 2022 1226 days 539 0
UNICEF என்பது ஐக்கிய நாடுகளின் சர்வதேச குழந்தைகள் அவசர நிதியம் என்பதைக் குறிக்கும்.
இது 1946 ஆம் ஆண்டு டிசம்பர் 11 ஆம் தேதியன்று ஐக்கிய நாடுகள் சபையால் நிறுவப் பட்டது.
இது ஐரோப்பா மற்றும் சீனா ஆகிய நாடுகளில் போருக்குப் பிந்தைய சூழ்நிலைகளில் குழந்தைகளின் அவசரத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான நடவடிக்கையினை மேற்கொள்கிறது.
1953 ஆம் ஆண்டில், இது ஐக்கிய நாடுகள் சபை அமைப்பின் நிரந்தர அங்கமாக மாறியதோடு, இதன் பெயர் ஐக்கிய நாடுகள் சபையின் குழந்தைகள் நிதியம் என சுருக்கப் பட்டது.
2022 ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு ‘ஒவ்வொருக் குழந்தைக்குமான உள்ளடக்கம்’ என்பதாகும்.