ஐக்கிய நாடுகளின் பேரிடர் அபாயக் குறைப்பு அலுவலகத்தின் உலக மதிப்பீட்டு அறிக்கை
May 1 , 2022 1193 days 472 0
ஐக்கிய நாடுகளின் பேரிடர் அபாயக் குறைப்பு அலுவலகம் ஒரு உலக மதிப்பீட்டு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
2030 ஆம் ஆண்டில், இந்த உலகம் ஆண்டுக்கு சுமார் 560 பேரழிவுகளை எதிர்கொள்ளும் என்று இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கடந்த 20 ஆண்டுகளில், பூமி ஆண்டுதோறும் 350 முதல் 500 நடுத்தரம் முதல் பெரிய அளவிலான பேரழிவுகளை சந்தித்து வருகிறது.
இது கடந்த 30 ஆண்டுகளில் பதிவாகியதை விட ஐந்து மடங்கு அதிகமாகும்.
பேரழிவுகள் அடிக்கடி ஏற்படுவது அதிகரித்துள்ளதற்கு போதுமான பேரிடர் மேலாண்மை இல்லாமை மற்றும் பருவநிலை மாற்றம் ஆகியவை காரணமாக இருக்கலாம்.
மோசமான பேரிடர் மேலாண்மை அமைப்புகளும் நிர்வாகமும் அனைத்துச் சமூக-பொருளாதார ஆதாயங்களையும் ஆபத்தில் ஆழ்த்துகின்ற ஒரு உண்மையான உலக ஆபத்து நிலையைக் குறைத்து மதிப்பிடுகின்றன.