TNPSC Thervupettagam

ஐக்கிய நாடுகள் சபையின் வாழ்விடம் குறித்த மாநாடு 2025

June 9 , 2025 19 hrs 0 min 30 0
  • ஐக்கிய நாடுகள் சபையின் வாழ்விடம் குறித்த மாநாட்டின் இரண்டாவது அமர்வு ஆனது கென்யாவின் நைரோபியில் நடைபெற்றது.
  • இது ஐக்கிய நாடுகள் சபையின் 193 உறுப்பினர் நாடுகளைக் கொண்ட நிலையான நகரமயமாக்கல் மற்றும் மனித குடியேற்றங்கள் குறித்த முடிவெடுக்கும் அதிகாரம் கொண்ட உலகளாவிய மிக உயரிய அமைப்பாகும்.
  • இந்த சபையானது ஐக்கிய நாடுகள் சபையின் 2026–2029 ஆம் ஆண்டிற்கான வாழ்விட உத்திசார் திட்டத்தினை ஏற்றுக் கொண்டது.
  • இந்தத் திட்டமானது, நகரங்கள் மற்றும் சமூகங்களை உள்ளடக்கிய வகையிலான, பருவநிலை நெகிழ்திறன் கொண்ட மற்றும் மிகவும் சமமான வளர்ச்சியை விரைவு படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இது குறிப்பாக பருவநிலை மாற்றம், மோதல் மற்றும் சமத்துவமின்மையால் பாதிக்கப் பட்ட நாடுகளில் கவனம் செலுத்தும்.
  • மலேசியாவானது, 2025-2029 ஆம் ஆண்டிற்கான ஐ.நா. மனிதக் குடியேற்றத் திட்டத்தின் (UN-Habitat) பொதுச் சபையின் தலைமையாக அதிகாரப் பூர்வமாக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளது.
  • மலேசியாவின் தலைமைப் பதவியை இதன் 193 உறுப்பினர் நாடுகளும் ஒருமனதாக அங்கீகரித்த போது அது புதிய வரலாற்றினைப் படைத்தது.
  • இந்தக் காலகட்டத்தில், ஆசியா பசிபிக் பிராந்தியத்தைப் பிரதிநிதித்துவப் படுத்தச் செய்வதற்காக மலேசியா தலைமைப் பதவியையும், ஐக்கிய அரபு அமீரகத்துடன் இணைந்து நிர்வாகக் குழுவில் ஒரு இடத்தையும் வகிக்கும்.
  • ஐக்கிய நாடுகள் சபையின் வாழ்விடம் குறித்த மாநாடானது நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை கூடுகிறது.
  • உலக நகர்ப்புற மன்றம் 13 (WUF13) ஆனது அஜர்பைஜானின் பாகுவில் "Housing the world: Safe and resilient cities and communities" என்ற ஒரு கருத்துருவின் கீழ் 2026 ஆம் ஆண்டில் நடைபெறவுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்