ஐக்கிய நாடுகள் சபையின் வாழ்விடம் குறித்த மாநாடு 2025
June 9 , 2025 19 hrs 0 min 30 0
ஐக்கிய நாடுகள் சபையின் வாழ்விடம் குறித்த மாநாட்டின் இரண்டாவது அமர்வு ஆனது கென்யாவின் நைரோபியில் நடைபெற்றது.
இது ஐக்கிய நாடுகள் சபையின் 193 உறுப்பினர் நாடுகளைக் கொண்ட நிலையான நகரமயமாக்கல் மற்றும் மனித குடியேற்றங்கள் குறித்த முடிவெடுக்கும் அதிகாரம் கொண்ட உலகளாவிய மிக உயரிய அமைப்பாகும்.
இந்த சபையானது ஐக்கிய நாடுகள் சபையின் 2026–2029 ஆம் ஆண்டிற்கான வாழ்விட உத்திசார் திட்டத்தினை ஏற்றுக் கொண்டது.
இந்தத் திட்டமானது, நகரங்கள் மற்றும் சமூகங்களை உள்ளடக்கிய வகையிலான, பருவநிலை நெகிழ்திறன் கொண்ட மற்றும் மிகவும் சமமான வளர்ச்சியை விரைவு படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இது குறிப்பாக பருவநிலை மாற்றம், மோதல் மற்றும் சமத்துவமின்மையால் பாதிக்கப் பட்ட நாடுகளில் கவனம் செலுத்தும்.
மலேசியாவானது, 2025-2029 ஆம் ஆண்டிற்கான ஐ.நா. மனிதக் குடியேற்றத் திட்டத்தின் (UN-Habitat) பொதுச் சபையின் தலைமையாக அதிகாரப் பூர்வமாக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளது.
மலேசியாவின் தலைமைப் பதவியை இதன் 193 உறுப்பினர் நாடுகளும் ஒருமனதாக அங்கீகரித்த போது அது புதிய வரலாற்றினைப் படைத்தது.
இந்தக் காலகட்டத்தில், ஆசியா பசிபிக் பிராந்தியத்தைப் பிரதிநிதித்துவப் படுத்தச் செய்வதற்காக மலேசியா தலைமைப் பதவியையும், ஐக்கிய அரபு அமீரகத்துடன் இணைந்து நிர்வாகக் குழுவில் ஒரு இடத்தையும் வகிக்கும்.
ஐக்கிய நாடுகள் சபையின் வாழ்விடம் குறித்த மாநாடானது நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை கூடுகிறது.
உலக நகர்ப்புற மன்றம் 13 (WUF13) ஆனது அஜர்பைஜானின் பாகுவில் "Housing the world: Safe and resilient cities and communities" என்ற ஒரு கருத்துருவின் கீழ் 2026 ஆம் ஆண்டில் நடைபெறவுள்ளது.