ஐந்து சிகரங்களில் ஏறி சாதனைப் படைத்த முதல் இந்தியப் பெண்
May 10 , 2022 1197 days 562 0
8,000 மீட்டருக்கு மேல் உயரம் கொண்ட ஐந்து சிகரங்களில் ஏறி சாதனைப் படைத்த முதல் இந்தியப் பெண்மணி என்ற ஒரு பெருமையைப் பிரியங்கா மோஹிதே என்பவர் பெற்றுள்ளார்.
அன்னபூர்ணா என்ற மலைச் சிகரத்தில் ஏறிய முதல் இந்தியப் பெண்மணியும் இவரே ஆவார்.
30 வயதான பிரியங்கா மோஹிதே 2020 ஆம் ஆண்டின் டென்சிங் நோர்கே சாகச விருதினையும் வென்றவர் ஆவார்.