நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகத்திற்கான மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் “ஒரு தேசம் ஒரு அட்டை” திட்டத்தைச் செயல்படுத்துவதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.
இது நாடெங்கிலும் உள்ள பொது விநியோக முறையின் கீழ் இயங்கும் கடைகளை வெளி மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் (Migrants – இடப்பெயர்வாளர்கள்) அணுகுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த நடவடிக்கையானதுப் பயனாளிகள் கடை உரிமையாளர்களைச் சார்ந்திருப்பதைக் குறைப்பதையும் ஊழலைத் தடுப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.