இந்தியச் சீர் நேரத்தினை (IST) மிகவும் பிரத்தியேகமாகப் பயன்படுத்தச் செய்வதைக் கட்டாயமாக்குவதன் மூலம் நேரக் கணக்கீட்டைத் தரப்படுத்துவதற்கு என அரசாங்கம் புதிய விதிகளை முன்மொழிந்துள்ளது.
சட்டமுறை அளவியல் (இந்திய நிலையான நேரம்) விதிகள், 2024 வரைவு ஆனது, சீர் முறை நேர நடைமுறைகளுக்கான ஒரு சட்டப்பூர்வக் கட்டமைப்பை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
சட்ட, நிர்வாக, வணிக மற்றும் பல அதிகாரப்பூர்வ ஆவணங்களுக்காக வேண்டி ஒரே அங்கீகரிக்கப் பட்ட நேரக் குறிப்பாக IST இருக்கும்.
தொலைத்தொடர்பு, வங்கி, பாதுகாப்பு, 5G மற்றும் செயற்கை நுண்ணறிவு போன்ற முக்கியமான உள்கட்டமைப்பில் ஒரு துல்லியமான நேரக் கணக்கீட்டை இந்தத் திட்டம் ஆதரிக்கிறது.
அரசாங்கத்தின் முன்கூட்டிய ஒரு ஒப்புதலுடன் வானியல், வழி செலுத்துதல் மற்றும் அறிவியல் ஆராய்ச்சிக்கு சில விதிவிலக்குகள் அளிக்கப்படும்.