நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்கையில், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் ஒரே நாடு ஒரே பதிவு முறை என்ற திட்டத்தை அறிமுகம் செய்தார்.
இந்தத் திட்டமானது வணிகம் செய்தலின் எளிமைத் தன்மையையும் வாழ்க்கை முறையின் எளிமைத் தன்மையையும் மேம்படுத்தும்.
இந்தத் திட்டமானது நாடு முழுவதும் ஒரே மாதிரியான பதிவு முறையைக் கொண்டு வர உள்ளது.
எந்த விதப் பதிவானாலும், அது நிலப்பதிவானாலும் (அ) வாகனப் பதிவானாலும் (அ) எந்த ஓர் இதரப் பதிவாக இருந்தாலும் சரி இதில் நாடு முழுவதும் ஒரே மாதிரியான செயல்முறையே பின்பற்றப்படும்.