ஒற்றை அச்சு சூரியசக்தி இணைப்பு அமைப்பு
April 18 , 2022
1204 days
487
- டாடா ஆற்றல் நிறுவனமான டாடா பவர் ரினீவபிள்ஸ் நிறுவனமானது குஜராத்தில் உள்ள தோலேராவில் 300 மெகாவாட் சோலார் ஆலையை இயக்கத் தொடங்கியுள்ளது.
- இது இந்தியாவின் மிகப்பெரிய ஒற்றை அச்சு சூரியசக்தி இணைப்பு அமைப்பாகும்.
- இந்த ஆலையானது, ஆண்டுக்கு 774 MU (million units) திறனை உற்பத்தி செய்யும்.
- மேலும், இது ஆண்டிற்கு தோராயமாக 704340 மெட்ரிக் டன் என்ற அளவிற்கு கார்பன் வெளியேற்றத்தைக் குறைக்கும்.

Post Views:
487