தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாகூர், அந்த அமைச்சகத்தின் ஒளிபரப்பு சேவைத் தளத்தினைத் தொடங்கி வைத்தார்.
நம் நாட்டின் ஊடகம் மற்றும் பொழுதுபோக்குத் துறைகள் மிகவும் விரைவாக வளர்ந்து வருகின்றன.
இது அடுத்த 2 ஆண்டுகளில், தற்போதுள்ள 25 பில்லியன் டாலர் மதிப்பினைக் கடந்து 30 பில்லியன் டாலர் என்ற வரம்பினை எட்டும்.
இந்தியாவில் 1762க்கும் மேற்பட்ட பல்சேவை மையங்கள், 900க்கும் மேற்பட்ட செயற்கைக் கோளால் இயங்கும் தொலைக்காட்சி நிறுவனங்கள், 380க்கும் மேற்பட்ட FM அலைவரிசைகள் மற்றும் 350 சமூக ரேடியோ நிலையங்கள் உள்ளன.
இந்தத் தளமானது மேக் இன் இந்தியா, வணிகம் செய்தலை எளிமையாக்கல் திட்டம் மற்றும் டிஜிட்டல் இந்தியா முன்னெடுப்பு ஆகியவற்றுள் அடங்கும்.